states

img

திருப்பதி மலைப்பாதையில் 6-ஆவது சிறுத்தை சிக்கியது

ஆந்திர மாநிலத்தின் திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் வனத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் 6-ஆவது சிறுத்தை சிக்கியுள்ளது.
திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் பாத யாத்திரை சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்பகுதிக்கு அருகே சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டது. இந்த கூண்டில் ஏற்கனவே 5 சிறுத்தைகள் பிடிபட்டது. இந்த நிலையில், வனத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் 6-ஆவது சிறுத்தை சிக்கியுள்ளது.